Thursday, 4 October 2012

வலி....



உன் அழுகை சோகமல்ல......
அது என் மீது நீ கொண்ட பாசம்.....
என் கடும் வார்த்தைகள் கோபமல்ல......

அது நான் உன் மீது கொண்ட உரிமை....
பழகிடும் உறவுகள்  பிரிந்திடும் வேளையில்

விழிகளும்,,,, தாங்காது...!!!! தூங்காது...!!!! 

                                கவித்தயாரிப்பு: உஷா நிலா

கண்ணீர்,,,,,,,,



                                                                                                             uthayausha88@gmail.com

தோல்வி தான் தோழன் ....



தோல்வி என்பது உனக்கு வழங்கப்படும் பரீட்சை தாள்....
நீ முதல் அதை படித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்...
உன் பலவீனங்களை பலப்படுத்த கடவுள் 

உனக்கு அளிக்கும்
சந்தர்ப்பம் தான் தோல்வி....
உன்னை இன்னொருபடி முயற்ச்சிக்கு 

தூக்கிவிடும் உன் தோழன் தான் தோல்வி....

நீ வீழ்ந்தால் கவலை வேண்டாம்..
நீ விழவேண்டும் அப்போ தான் உன்னால் எழ முடியும்...
தோல்வி இல்லாவிடின் வெற்றியின் பெறுமதி
உனக்கு தெரியாமலே போய்விடும்...
நீ மனிதன் என்பதை உனக்கு நினைவு 
செய்வதேதோல்வி தான்........

உன் முயற்ச்சிகளை காலத்தை விட வேகமாக இயக்கு
அப்போ தான் உன் வெற்றி நாளைய விடியலில்...
உன் வேகத்தின் துரிதம் பகலாக இருந்தாலும் பரவாயில்லை
உன் விழிகளால் விளக்கேற்றி வை...
உனக்கான வெளிச்சம் வெகு தூரம் இல்லை...


கவிதை இயக்கம் : உஷா நிலா
                           uthayausha88@gmail.com 

வாழ்வின் நியதி......


உன் வாழ்க்கை பயணத்தில்................
சுவாசிக்கும் காற்றும் உன்னை
சோதிக்கும் தருணம் வரும்
அது இறைவனின் ஏட்டில் எழுதப்பட்ட விதி...........
ஒன்றாய் கரம் கோர்த்தவனும்
ஓர் நாள் உனக்கு எதிராகலாம்
அது பிறர் செய்யும் சதி........

குற்றம் சொல்லும் மனிதர்கள்
என்றும் கூறிக்கொண்டே இருப்பர்
அது அவர்களின் வியாதி........
வீழ்ந்தாலும் தாழ்ந்தாலும்
பிறர் உன்னை தூற்றினாலும்
உன் மனதிற்கு நீயே நீதிபதி......


வற்றினாலும் மீண்டும் மீண்டும்
வழிந்தோடும் தன்மை கொண்டதே நதி..........
உன் இலக்கை நீ இயக்குவதற்கு
உன் முயற்ச்சியில் வேண்டும் துரித கதி......
படைத்தவனே வியந்து பாராட்டும் வண்ணம்
பார் போற்ற வாழ்வதற்கு சபதம் எடு
அது தான் உன் மதி............

தனக்கும் தனம் வரும் என்றால்
தன்னலத்திட்க்காய் சிலர் செயும்
தீய செயல் அநீதி........
அதை தட்டி கேட்க்க சென்றவனுக்கு
என்றும் கிடைத்ததில்லை நீதி...........
இதை இங்கு சொல்வதால்
உஷாவிற்க்கு கிடைக்க போவதில்லை நிதி.......
இருந்த போதிலும் இது தான் வாழ்வின் நியதி......


                                கவிதை இயக்கம்: உஷா நிலா

முயற்சியின் வேகம்........




உன் வாழ்க்கை தான் உனக்கு வகுப்பறை...
துயரங்கள் தான் உனக்கான பாடங்கள்...
தோல்விகளும் கஷ்டங்களும் உனக்கான பாடங்கள்..
உனக்கு உன்னை தவிர யாரும் நிரந்தர சொந்தமில்லை..
உன் கஷ்டங்களே உன்னை பலப்படுத்தும்...
உன் பலன்கள் ஒருபோதும் பயனற்று போவதில்லை..
.

தென்றலுக்கு முகமில்லை உன் தேடலில் முடிவில்லை...
தொடும் தூரம் நிலவில்லை தோல்வி இல்லா வாழ்வில்லை...
நம்பிக்கை என்ற நண்பன் உன் நாணயத்தின் உண்மை பங்கன்..
முயற்ச்சி என்னும் ஊன்றுகோல் உனக்கு மூன்றாம் கால்...
உனக்கான சிறு சோதனைகள் உன் பெரும் சாதனைக்காக
நீ நடக்கும் பாதையில் வீசப்பட்ட முட்கள்...


மனம் தளராதே தோழா!
தோல்வி உன்னை எவ்வளவு சோதித்தாலும்
துயரங்களால் நீ வாழ்வின் எல்லைக்கே துரத்தியடிக்க பட்டாலும்
முடியும் என்ற உன் முயற்ச்சியை மட்டும் என்றும் மூடிவிடாதே....
உன் முன்னேற்றத்தை முடிவு செய்வதே உன் முயற்ச்சி தான்...


                                               கவிதை இயக்கம்: உஷா நிலா

காதல் பருவமழை.........

உன் விழியசைவில் என்னை விழ வைத்தாய்........
உன் இதழ் அசைவில் என்னை சிறை செய்தாய்......
தென்றலாய் என் தேகம் தீண்டினாய்....
ஓர் நாளிலே என்னை காதல் தேரிலே ஏற்றினாய்..
.
 
உன் பார்வைகளால் என்னை பருகினாய்...
உன் வார்த்தைகளால் என்னை வருடினாய்...
என் பருவம் இதற்க்காகவே பூத்து நின்றது...
உன் மௌன மொழிகளால்
என் 
வெட்க்கங்களுக்கும் சத்தம் செய்தாய்...

என் மனம் நீ வசிக்கும் மாளிகையானது..
என் விரல் நீ மீட்டும் வீணையாகியது...
எண்ணற்ற உன் எண்ணங்களை
ஏந்தியிடும் சுவரொட்டி தான் என் மனது...
என் இதயத்தில் பல்லாயிரம் பட்டாம் பூச்சிகளுக்கு திருவிழா
என் அருகில் நீ அமருகையில்... 


உன் காதல் கடிதங்கள் எனக்கு பரீட்சை தாள்கலாகியது....
என் இரவுகள் உன் நினைவுகள் தாங்கும் க
னவுகளாகியது...
விடையில்லா வினாவாகிய என் மனதிற்க்கு
கரையில்லா கடலாகியது உன் காதல்...
பருவமழை என் வயதிற்க்கு பால் வார்த்தது...
காதல் என்ற பருவப்பூ என் இதயத்தில் படர்ந்தது.... 


இக் கற்ப்பனைகளின் சொந்தம் : உஷா நிலா


பிரிவும் பிரிக்காது..........



நீயும் எனக்கு சொந்தமில்லை
நானும் உனக்கு சொந்தமில்லை...
நம் நினைவுகள் மட்டும் இன்றும்
நம் இருவருடனும் உறவாடி கொண்டிருக்கிறது..
என் கண்கள் எனும் கருவறை
உன் உருவத்தையும்..
என் இதயம் எனும் மனவறை
உன் நினைவுகளையும் சுமக்கும் வரை
பிரிவு என்னும் சொல் கூட நம்மை பிரிக்காது அன்பே...


கவிதை தயாரிப்பு: உஷா நிலா


விழியின் அமுதம்...........


அவன் விழிப்பார்வை பருகி
என்னையே நான் மறக்க வேண்டும்...
அவன் புன்னகை குளத்தில்
என் சந்தோஷ தாமரைகள் பூக்க வேண்டும்..
.
அவன் விரல் பிடித்து நான் நடக்கையில்
எம் பொருத்தம் கண்டு
எட்டு திசையும் ஒருகணம் ஸ்தம்பித்து நிற்க்க வேண்டும்..
அவன் பாசம் கண்டு பறவைகள் கூட
அவன் வேண்டும் என்றே அடம் பிடிக்க வேண்டும்...

என் மனதில் அந்த தென்றல் யாசிக்க
அவன் அன்பென்ற தகுதியில் சிகரத்தில் நிற்க்க வேண்டும்...
அந்த அன்பினால் என் விழிகளுக்கு- தினம்
ஆனந்த குளியல் வேண்டும்...
அப் பூங்காவின் வலிய இரு கைச்சிறைக்குள்
நான் மட்டும் ஆயுள் கைதியாய் வாழ வேண்டும்...

நீல வானம் அவனை கண்டு நாணம் கொண்டு
கரு மேகங்களால் தன் முகம் மூடும்
விந்தையை இவ் உலகம் காண்பதெப்போ?
இத்தனையும் மொத்தம் சேர்த்து
பிரம்மன் எப்போதோ செப்பனிட்டு
அனுப்பி வைத்த ஓர் சிற்ப்பம் வரும் வழி
பார்த்து இவ்விரு கருவிழிகள் நோக்கும் தருணம் எப்போ? 


இக் கவிதை இயக்கம்: உஷா நிலா


அவல நிலை.........






                    அகதிகள்......

 

ஊர் விட்டு ஊர் ஊராய்
உலவும் உயிர்களா...?
இருப்பை இழந்து இடுக்கண் அடைந்து
இடம் பெயர்நதோரா?

சொந்தங்களால் கைவிடப்பட்டு
சோதனைகளால் தள்ளப்பட்டவர்களா?
அனாதியிலே ஆதரவற்று "அகதி" என்னும்
அடைமொழி கொண்டா
அகராதியில் எழுதப்பட்டார்கள்?

ஏன் இந்த நிலை?
என்றேனும் யோசித்ததுண்டா சமுதாயம்?
விண்ணிலே விஞ்ஞானம் தேடல்
மண்ணிலே அஞ்ஞானமா?
விரக்தியில் விரதம் இருக்கும் இவர்களுக்கு
வல்லமையை விதைப்பது யார்?
எம் முயற்சியால் விதியையும் மாற்றி எழுதுவோம்
இவர்களுக்கும் விடியும் ஓர் நாள் என்று....
   
                       
                         {கவித்தயாரிப்பு: உஷா நிலா }

காதல் தவம்.......


அன்பே...!
உன்னை என் விழிகள் புகைப்படம்
எடுத்த நாள் முதல்...
எண்ணற்ற உன் எண்ணங்களின் பிரதிகள் என் மனதில்...

தலைக்கணம் பிடிக்கிறது எனக்கு உன் அன்பெனும்
இலக்கணம் படித்து...
எப்படி சொல்வதென்பேன்
என்னவென்று சொல்வதன்பே உன் அன்பை...
எங்கே புடம் போட்டு தேடினாலும்- எவராலும்
எள்ளளவும் குறை காண முடியா ஓவியம் நீ...

எப்பிறப்பில் நான் என்ன தவம் செய்தேனோ
இப்பிறப்பில் உன்னை வரமாய் பெற...
இப்பிறப்பில் நான் என்ன தவம் செய்ய வேண்டுமோ
இனி எப்பிறப்பிலும் உன்னை இழக்காமல் இருக்க...
 
{கற்ப்பனை உதயம்: உஷா நிலா}

விழியின் அழகு........




என் வாலிபத்தை விபத்துக்குள்ளாக்கிய
உன் விழிகளுக்கு விஞ்ஞாபனம் விதைத்தது யார்?
நான் வழுக்கி விழுந்த உன் இதயவரையை
வடிவமைத்தது யார்?


நான் துயில் கொள்ளும் பூந்தோட்டமான
உன் மார்பிற்க்கு மைதானம் வரைந்தது யார்?

என் விழிகள் உன்னை ஸ்பரிசிக்கும் போது
என் உயிர் சொர்க்கத்தை எட்டுகிறது...

வார்த்தைகளை மட்டும் வாசிக்க தெரிந்த எனக்கு
காதலையும் சுவாசிக்க கற்று தந்தது உன் பாசம்..
என் கற்பனைகளும் முரண் பட்டு கொள்கிறது உயிரே
எம் மொழியில் உன்னை வர்ணிப்பது என தெரியாமல்...

இவை அனுபவமல்ல
இக் கற்பனைகளின் இயக்கம்
: உஷா நிலா

பார்வையின் பயணம்.......




உயிரே...
உன்னை நினைக்கும் பொது என்னிதயம்
தன்னிலை மறக்கிறது...
எத்தனை விழிகள் எதிரினில் தோன்றினும்
என் விழிகள் தேடிடும் நீ வரும் வழி....

 
உன் பூவிதழ் அருந்தி
கடல் நீரும் கனிச்சாராக மாறியதென்னவோ
உண்மை தான்....
உன் விம்பம் விழுந்து நிழல் கூட
உன்னை போல் ஒரு அழகு பொம்மையானது
என்பது சத்தியமாய் பொய் இல்லை..

உன் சுவாசத்தில் கலந்ததால்
தென்றலுக்கும் மோட்சம் கிட்டியதாமே..?
உன் உயிரில் உறைந்ததால் தான்
எனக்கும் ஆயுள் கெட்டியானதோ?

கிளிகளும் உன்னுடன் கொஞ்சி பேசும்
கிழக்கும் உன்னை கண்ட பின்னே வெளுக்கும்..
உன் மார்பில் துயில் கொள்ளவே
மலர் கூட்டங்கள் தோரணம் ஆகும்..
அழகென்னும் அகராதி உன்னை
படைத்த பின்பு தான் பிறந்திருக்குமோ?
அப்படித்தான் தோண்றுகிறது எனக்கும்.
..

{கவிதை இயக்கம்: உஷா நிலா}

சூரியனின் நேற்றைய காற்று...


 
 
 
சூரியனின் நேற்றைய காற்று...

மனமாளிகையில் கட்டி வைத்த

கற்பனை சித்திரங்களை
சித்தரிக்கும் ஓவியமாய்
சூரியனின் நேற்றைய காற்று...
இரவின் நிசப்தத்தில்
பல உறவுகளின் உணர்வுகளிட்க்கு
ஊர்வலமும் இங்கே தான்...
தினம் ராத்திரியில் உலா வரும் ஒரு நிலா
நேற்றைய காற்று...

மனித உணர்வு புத்தகத்தின் பக்கங்களை

தினம் புரட்டி பார்க்கும் ஓர் பயணம்...
சூரிய தோட்டத்தில் நேற்றைய காற்றின் சுவாசத்தை
எத்தனையோ பூக்கள் சுவாசிக்க தான் செய்கின்றன...

உள்ளத்தில் தூங்கும் எரிமலைகள்

நேற்றைய காற்றின் வழியே
வெளிப்படும் பட்சத்தில் தான்
புரிகிறது மானிடத்தின் ஏக்கமும் தாக்கமும்...

மாற்றம் என்ற ஒன்று உலகில்

மாறாத போதிலும்...
உங்கள் நிகழ்ச்சி ஏற்றம் பெற வாழ்த்தும்

                              இவள்: உஷா நிலா

என் பிறப்பின் தாய்.........



அம்மா உனது குருதி குளியலில்
என் ஜனனம்...
உனது பூமடிதான் நான் துயிலும்
பஞ்சனை...
உன் பத்து மாத தவம்
இன்று என் பரிணாமத்தின் உதயம்...


தாயே...!
என்னை இழந்து உன் உயிர் காக்கும்
தருணம் வரினும் அன்னையே
அது என் பாக்கியமே....
இல்லையேல் மீண்டும் உன்னை
என் கருவினில் சுமக்கும் தருணம் வரினும்
அது என் பூர்வ ஜென்ம வரமே...


கவிதை இயக்கம்: உஷா நிலா

அழகுக்கே அழகு....




விழி அழகா? மொழி அழகா? இரண்டும் இல்லை...
உன் விழி பேசும் மொழி தான் அழகு...
இதழ் அழகா? சொல் அழகா? இரண்டும் இல்லை..
உன் இதழ் சிந்தும் சொல் தான் அழகு...
நடை அழகா? இடை அழகா? இரண்டும் இல்லை
உன் நடையினில் நெளியும் இடை தான் அழகு...

கலை அழகா? சிலை அழகா? இரண்டும் இல்லை..
கலை வடிவிலுள்ள உன் உருவ சிலையே தனி அழகு...
ஊர் அழகா? தெரு அழகா? இரண்டும் இல்லை
உன் ஊரில் நீ வசிக்கும் தெரு தான் அழகு...
அழகழகா? அறிவழகா? இரண்டும் இல்லை
உன் அறிவிலுள்ள அழகே அழகு தான்..


கவிதை இயக்கம்: உஷா நிலா

தேவதை நிலவு........



அவள் புன்னகையில் குளித்த பின்னரே
ரோஜாக்கள் இதழ் விரிக்கின்றன...!
அவள் கயல் விழிகள் கண்டு
விண்மீன்கள் விடியலை தேடும்...!
அவள் கற்க்கண்டு மொழிகள் குடித்தே
என் ஆயுள் நீள்கிறது...!

அவள் கருங்கூந்தல் பிடித்தே
தென்றல் ஊஞ்சல் ஆட துடிக்கும்......!

மின்னல் அவள் மெல்லிடை தேடும்
தான் துயில் கொள்ளும் பள்ளியறை என நினைத்து ....!
என் உயிர் கொண்டு அவள் உயிர் வாழும் என்றால்
அது என் வரமே...!
அவளை இழந்து என் உயிர் வாழும் என்றால்
அதுவே என் மரணம்....!

கவிதை இயக்கம் : உஷா- நிலா

கனாக் காதல்.......


உங்கள் கருத்துக்களை  usha .uthayakumar @yahoo.com 
                                                   uthayausha88@gmail .com 

                                                                        பதிவு  செய்யுங்கள்.........

உன் நினைவுகளில் நான்.......

உன் சுவாசம் எனக்குள் பிரணவம்
உன் நாமம் எனக்குள் உயிர் துடிப்பு....!
தனிமையில் நான் இருக்கையில்
என் பொழுதுகளை நீயே களவாடிக்கொள்கிறாய்....!
எம் விழிகளின் சந்திப்பில்
இடம் மாறிய எம் இதயங்களால்...
என் எதிர்கால கனவுகள்
உனக்கும் சேர்த்து தான் வர்ணம் பூசுகிறது...!

கவிதை இயக்கம்: உஷா நிலா
 
 உங்கள் கருத்துக்களை   usha .uthayakumar @yahoo.com 
                                                       uthayausha88@gmail .com 

                                                                        பதிவு  செய்யுங்கள்.........
 

காதல் அருவி........


உங்கள் கருத்துக்களை  usha .uthayakumar @yahoo.com 
                                                   uthayausha88@gmail .com 

                                                                        பதிவு  செய்யுங்கள்.........



அழகு நிலவு.....




உங்கள் கருத்துக்களை    usha .uthayakumar @yahoo.com 
                                                       uthayausha88@gmail .com 

                                                                     
பதிவு  செய்யுங்கள்.........

அதிசய அழகு.......


நீ நடந்த கால் தடம் பட்டே
அலைகள் தன உடல் நனைக்க ஏங்கும்.....!
உன் பார்வை விழுந்தே
சூரியன் ஒளித்தொகுப்பு செய்ய துடிக்கும்....!
நீ துயில் கொள்ளும் பஞ்சணையில்
மரணிக்கவே மலர் கூட்டங்கள் தவிக்கும்...!
உன் மென் பாதம் பட்டு
புல்வெளிகளும் கவிதை பாடியது..!

உனக்காக ஒரு கிரகம் செய்வேன்
நாம் மட்டும் அங்கு வாழ...!
தென்றல் உன் மடியில் இளைப்பாறியது
அந்த நிமிடம் மீண்டும் பிறந்தேன் என்றது..!
உன் மூச்சு காற்று பட்டு
பாலைவனத்திலும் பருவ மழை பெய்ததாமே..!
பிரபஞ்சத்தின் அத்தனை அழகும் திருடி தான்
பிரம்மன் உன்னை பூமிக்கு தந்தானோ...!

{ கவிதை இயக்கம்: உஷா நிலா }

வான் முத்து,,,,,,,,,

                            நிலா...............
வானமெனும் பூங்கடலில்
வலம் வரும் பூங்கொடியே ...!
விண்ணை விட்டு நீ மண்ணகம் வர
முள்வேலி போட்டதாரோ?

செப்டெம்பர் மாதத்து செப்பனிட்ட அழகே....!

செங்கடலும் நீ இன்றி செம்மையளிக்கவில்லை...
கவிஞர்களின் கற்பனைக்கு
நீயின்றி ஏது சொர்ப்பனம்...!

எட்டா தூரத்தில் நீயிருக்க- என்

விரல் உன்னை தொட்டு
பார்த்திட விரதம் இருக்கு..!
முகில்திரையை மெல்ல நீ விலக்கு
இல்லை தொடரும் உன் மீது என் விழி வழக்கு...!

{ கவி வரிகள்: உஷா நிலா}
வாலிபம்.........

இலக்கிய வானில் கோலமிடும்

மின்மினிகள் போல்...,
வசந்தங்களுக்கும் வண்ணமளித்து
வடிவமைப்பது வாலிப வாழ்க்கையே..!


காகிதத்திற்க்கு கற்பனையையும்
சிந்தனைக்கு உள்ளத்தையும்
பேனாவிற்கு கரத்தையும்
அன்பளிக்கும் காலமிது,,,!

சிறகில்லை ஆனால் பறப்பாய்..!

காலிருந்தும் வானில் மிதப்பாய்..!
இது தான் உன் இளமை..!
மனத்திரைக்கு மாலைகள் போட்டு
மலர்க்கூட்டமாக்குவாய்... !
காதலும் உன்னை சோதிக்கும்
வயது இது...!

பட்டாம்பூச்சியாய் பாடித்திரிந்து

பல கதை பரிமாறும் பருவமிது...!
உன் கனவுகளுக்கு களம் தீட்டும் ஏவுகணை
இந்த உதயம்..!
பல கனவுகளை தேடி
உன் உயிர் போகும் பயணமிது,,!

{கவிதை இயக்கம்: உஷா நிலா}

புதிய பிறப்பு........


அன்பே..!
காளை உன் விழிகள் விவாதிக்கின்றன
கன்னியிவள் காதலுடன்..!
என் கண்ணை உன் விழியில் வைத்து கொண்டு
வேறு திசை பார் என்பது நியாயமா..?
ஊணுறக்கமின்றி உனக்காகவும்
துடிக்கும் ஒரு இதயம் இது..!

என் இரவுகள் உன் கனவுகள் தாங்கும் போது
உன் நினைவுகளே எனக்கு ஆகாரமானது..!
உன்னை கவித்தேரில் ஏற்றுகையில்
என் குருதியிலும் கற்பனை பூக்கிறது....!
தாரகைகள் பூத்தூவ !
தாமரைகள் கைதட்ட !
வானகம் பன்னீர் தெளிக்க !
வந்து பிறந்தாயோ நீ உன் தாய் மடியில்..!

{கவிதை இயக்கம்: உஷா நிலா}

கனவு நிலவு.........




நீ மலர் தோட்டம் சென்றாய்
அங்குள்ள பூக்களெல்லாம் பட்டம் பூச்சியாய் மாறி
உன்னை சுற்றியதாமே...!
மான் விழி கொண்ட உன் மருளும் பார்வையில்
சிக்குண்ட மங்கையர் எத்தனையோ?
பிறரிடம் ஊமையாகிறது ஒரு புல்லாங்குழல்
அது வார்த்தையாகும் போது உன் இதழ் பட
வேண்டும் என்று....!

நீ அழும் போது என் விழிகளிலும்
நயாகரா வீழ்ச்சி..!
என் உதடு துடிக்கும் அதிலும்
உனக்கோர் சத்தம் கேட்கும்..!
நட்ச்சத்திரங்கள் உன் விழிகளிடம்
பிச்சை வாங்க வேண்டும்..!
என் வாழ்வின் புதிய அத்தியாயம்
உன்னால் எழுதப்பட்டது..!
அன்பே இது வெறும் கவிதைகள் அல்ல
உன் நினைவுகள் ஏந்தி வரும் ஏவுகணை,,!

                             {கவி வரிகள்: உஷா நிலா}

பூக்களின் புன்னகை............


இனிமையான பருவம்.....


பருவத்து நிலா......