Thursday, 4 October 2012

காதல் தவம்.......


அன்பே...!
உன்னை என் விழிகள் புகைப்படம்
எடுத்த நாள் முதல்...
எண்ணற்ற உன் எண்ணங்களின் பிரதிகள் என் மனதில்...

தலைக்கணம் பிடிக்கிறது எனக்கு உன் அன்பெனும்
இலக்கணம் படித்து...
எப்படி சொல்வதென்பேன்
என்னவென்று சொல்வதன்பே உன் அன்பை...
எங்கே புடம் போட்டு தேடினாலும்- எவராலும்
எள்ளளவும் குறை காண முடியா ஓவியம் நீ...

எப்பிறப்பில் நான் என்ன தவம் செய்தேனோ
இப்பிறப்பில் உன்னை வரமாய் பெற...
இப்பிறப்பில் நான் என்ன தவம் செய்ய வேண்டுமோ
இனி எப்பிறப்பிலும் உன்னை இழக்காமல் இருக்க...
 
{கற்ப்பனை உதயம்: உஷா நிலா}

No comments: