Thursday, 4 October 2012

அழகுக்கே அழகு....




விழி அழகா? மொழி அழகா? இரண்டும் இல்லை...
உன் விழி பேசும் மொழி தான் அழகு...
இதழ் அழகா? சொல் அழகா? இரண்டும் இல்லை..
உன் இதழ் சிந்தும் சொல் தான் அழகு...
நடை அழகா? இடை அழகா? இரண்டும் இல்லை
உன் நடையினில் நெளியும் இடை தான் அழகு...

கலை அழகா? சிலை அழகா? இரண்டும் இல்லை..
கலை வடிவிலுள்ள உன் உருவ சிலையே தனி அழகு...
ஊர் அழகா? தெரு அழகா? இரண்டும் இல்லை
உன் ஊரில் நீ வசிக்கும் தெரு தான் அழகு...
அழகழகா? அறிவழகா? இரண்டும் இல்லை
உன் அறிவிலுள்ள அழகே அழகு தான்..


கவிதை இயக்கம்: உஷா நிலா

No comments: