அவள் புன்னகையில் குளித்த பின்னரே
ரோஜாக்கள் இதழ் விரிக்கின்றன...!
அவள் கயல் விழிகள் கண்டு
விண்மீன்கள் விடியலை தேடும்...!
அவள் கற்க்கண்டு மொழிகள் குடித்தே
என் ஆயுள் நீள்கிறது...!
அவள் கருங்கூந்தல் பிடித்தே
தென்றல் ஊஞ்சல் ஆட துடிக்கும்......!
தென்றல் ஊஞ்சல் ஆட துடிக்கும்......!
மின்னல் அவள் மெல்லிடை தேடும்
தான் துயில் கொள்ளும் பள்ளியறை என நினைத்து ....!
என் உயிர் கொண்டு அவள் உயிர் வாழும் என்றால்
அது என் வரமே...!
அவளை இழந்து என் உயிர் வாழும் என்றால்
அதுவே என் மரணம்....!
கவிதை இயக்கம் : உஷா- நிலா
No comments:
Post a Comment