Thursday, 4 October 2012

சூரியனின் நேற்றைய காற்று...


 
 
 
சூரியனின் நேற்றைய காற்று...

மனமாளிகையில் கட்டி வைத்த

கற்பனை சித்திரங்களை
சித்தரிக்கும் ஓவியமாய்
சூரியனின் நேற்றைய காற்று...
இரவின் நிசப்தத்தில்
பல உறவுகளின் உணர்வுகளிட்க்கு
ஊர்வலமும் இங்கே தான்...
தினம் ராத்திரியில் உலா வரும் ஒரு நிலா
நேற்றைய காற்று...

மனித உணர்வு புத்தகத்தின் பக்கங்களை

தினம் புரட்டி பார்க்கும் ஓர் பயணம்...
சூரிய தோட்டத்தில் நேற்றைய காற்றின் சுவாசத்தை
எத்தனையோ பூக்கள் சுவாசிக்க தான் செய்கின்றன...

உள்ளத்தில் தூங்கும் எரிமலைகள்

நேற்றைய காற்றின் வழியே
வெளிப்படும் பட்சத்தில் தான்
புரிகிறது மானிடத்தின் ஏக்கமும் தாக்கமும்...

மாற்றம் என்ற ஒன்று உலகில்

மாறாத போதிலும்...
உங்கள் நிகழ்ச்சி ஏற்றம் பெற வாழ்த்தும்

                              இவள்: உஷா நிலா

No comments: