Thursday, 4 October 2012

தோல்வி தான் தோழன் ....



தோல்வி என்பது உனக்கு வழங்கப்படும் பரீட்சை தாள்....
நீ முதல் அதை படித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்...
உன் பலவீனங்களை பலப்படுத்த கடவுள் 

உனக்கு அளிக்கும்
சந்தர்ப்பம் தான் தோல்வி....
உன்னை இன்னொருபடி முயற்ச்சிக்கு 

தூக்கிவிடும் உன் தோழன் தான் தோல்வி....

நீ வீழ்ந்தால் கவலை வேண்டாம்..
நீ விழவேண்டும் அப்போ தான் உன்னால் எழ முடியும்...
தோல்வி இல்லாவிடின் வெற்றியின் பெறுமதி
உனக்கு தெரியாமலே போய்விடும்...
நீ மனிதன் என்பதை உனக்கு நினைவு 
செய்வதேதோல்வி தான்........

உன் முயற்ச்சிகளை காலத்தை விட வேகமாக இயக்கு
அப்போ தான் உன் வெற்றி நாளைய விடியலில்...
உன் வேகத்தின் துரிதம் பகலாக இருந்தாலும் பரவாயில்லை
உன் விழிகளால் விளக்கேற்றி வை...
உனக்கான வெளிச்சம் வெகு தூரம் இல்லை...


கவிதை இயக்கம் : உஷா நிலா
                           uthayausha88@gmail.com 

No comments: