Friday, 5 October 2012

இதயத்திற்குள் இதயம்...........



மனிதனாக படைக்க பட்ட ஒவ்வொருவருக்குள்ளும்
இரக்க குணம் இருக்க வேண்டும் என்பதற்கே
மனிதனுக்குள் இதயத்தை விதைத்து
அனுப்புகிறான் இறைவன்,,,,,,,,,,,!
அந்த இதயத்திட்குள்ளும் இன்னோர்
இதயத்தை விதைக்கிறது காதல்,,,,,,,,,,,!
இரு உயிர்களின்  இரத்த உறவுகளையும் தாண்டி
இருப்பெடுக்கும் ஒரு இதய உறவு....!



                            வரிகள்: உஷா நிலா,,,,,,,,,,,,,,

உன் நினைவுகளில் நான்....



அலைகளுக்கு திரும்பிப் போக இஷ்டமில்லை...
உன் கால் தடம் படாததால் அலைகளுக்கு
திரும்பிப் போக இஷ்டமில்லை...
சிம்மாசன பதவியேற்றம் நீ
அமர்ந்த கதிரைகளுக்கெல்லாம்...

உன் பார்வை பட்டு தானோ சூரியன்
ஒளித்தொகுப்பு செய்கிறது...


நீ அருகில் இருக்கையில் என்

வார்த்தைகளுக்கு ஊரடங்கு சட்டம்...
நிலவுக்கும் நித்திரையில்லை உன் நினைவால்...
சந்திரனில் குடியேற விஞ்ஞானம் முயற்சி...
உன் மடியில் இளைப்பாற கோள்கள் எல்லாம் போட்டி...
இவைகளுக்கில்லா பெருமை எனக்கு...
நீ கிடைத்ததில் உன்டான மகிழ்ச்சி....
 
                         கவி வரிகள் : உஷா நிலா........
                                   uthayausha88@gmail.com

மரணம்.......



                                     மரணம்........

குறிக்கப்பட்ட தேதியில்
பறிக்கப்பட்ட மலர்...
மீண்டும் புவிதனில் அவதரிக்க
நிகழ்ந்திடும் புது முயற்சி...

ஓய்வினைத் தேடிய உயிருக்கு
விடிவினை தராத உறக்கம்..

வாழ்க்கைப் பாதையின்
இறுதி யாத்திரை..
உன் சொர்க்கத்தையும்
நரகத்தையும் தீர்மானிக்கும் வாசல்
உன் உதயம் அஸ்தமனமாகும் நாள்
அதுவே மரணம்,,,
 
                  கவி வரிகள் : உஷா நிலா........
                  
 

விடியலைத் தேடும் பூபாளம்....




           விடியலைத் தேடும் பூபாளம்....
 
கோடைகால மணற் கிடங்காய்

எம் மக்களின் வாழ்வியல்
எப்போது மாறும் இந்த நிலை
என ஏங்கும் பல உள்ளங்கள்?
புடம் போட்டுத் தேடினாலும்
புரியவில்லை இந்த வறுமை நிலை
விலை வாசியின் ஏற்றத்தால் தினமும்
விரத நிலை பல வீட்டில்... 

தான் ஈன்ற கன்றை
தாரை வார்த்துக் கொடுப்பதற்கும்
தானே போராடி நிற்கும் தாய்
தள்ளாடுகிறாள் சீதனக் கொடுமையால்...
மாறுமா இந்த நிலை என பல
மனங்கள் சிந்தித்தால் மட்டும் போதுமா..?
சிந்தித்த மனங்கள் எல்லாம் ஒன்றாகி
வென்றிட வேண்டாமா இந்த பிரபஞ்சத்தை
நாளைய சமுதாயம் நம் வரலாறு கூற
இன்றைய சம்பவங்கள்

உனக்கு சரித்திரமாகட்டும் தோழா...

உழைப்பால் உயர்ந்தவர்கள் கோடி இந்த
உண்மையைப் புரிந்து
உயர்ந்திடு வாழ்வைத் தேடி...
சோம்பலாய் இருப்பவர்களை நம்பி
சோரம் போகாதே தம்பி...
சிந்தனைகளை சிதறடித்து எம்மை
சீர்குலைக்கும் சீரற்ற
எண்ணங்களை ஒழிப்போம்...
எத்தனை செல்வம் தான்
இயற்கை அன்னையிடம்
அதைச் செழிப்புறச் செய்யவும்
தயக்கமேன் மனிதா ?


அகதிகளின் அவல நிலையோ எம்

அகக் கண்களில் அனல் பொறியாய்...
தான் மட்டும் வாழ்ந்தால் போது மென்றால்
எதிர்கால சகோதரத்துவம்
எப்படிப் போவதோ...?
ஒன்றிணைந்தோம் ஒரே தேச மக்கள் என்று
ஒருமித்த கரங்கள் எல்லாம் ஓங்கினால்
ஒருநாளும் பஞ்சமில்லை எம் நாட்டில்
உதிரத்தை உரமாக்கி உயர்ந்திடு வாழ்வில்
விடியும் இந்த பூபாளம்
நாளை உன் வாழ்வில்...


                                         
                              கவி வரிகள் : உஷா நிலா,,,,,,,,,,
                             uthayausha88@gmail.com

இதயத்தின் விண்ணப்பம்........



 உன் பெயர் சொன்னால் புல்லாங்குழல் கூட
காற்றில்லாமலே கவிதை வாசிக்கும்...
உன் இதயம் கேட்டு நூறு ரோஜா தோட்டங்கள்
விண்ணப்பித்த போது உன் மனது எனக்கு மட்டும் மழை தந்தது...
          அடுத்த பௌர்ணமி பார் அதில் என் இதயம் தெரியும்...
 
 
 ப்ரியமுடன்: உஷா நிலா,,,,,
                                           uthayausha88@gmail.com 


மகளிர்க்காக...



                          மகளிர்க்காக...

பெண்ணும் பொன்னும் ஒன்று
அதை உணர வைத்தோம் இன்று...
மென்மையான பெண்மையிலே மெய்ப்பார்க்கும்

உன் அழகையல்ல அகத்தையே...

அடுப்பூதும் பெண்ணுக்கும் படிப்பெதற்கு

ஆடவன் சொன்னான் அன்று....

புது நூற்றாண்டில் பற்பல புதுமைகள்

படைத்தது பெண்ணினம் இன்று...


உதிரத்தை உரமாக்கி தன் சேய்க்கு

உணவளித்த தாயினமும் இங்கு...

மகளிர் தினத்தில் உயர்ந்து நிற்கின்றது இன்று...

பெண் படைப்புகளோ பலருக்கு

பாடப்புத்தகமானதும் உண்டு ...


பெண் பெருமை கூறும் பல வரலாறுகள்

கண்டு மனிதன் மாறியதும் உண்டு...

பெண்ணினம் பெற்ற பெருமையிலே

அன்னை தெரேசாவும்

அடங்கும் அவனியிலே...


ஆயிரம் அறிஞர்கள் பெண்களிலே...

அரசியல் வென்றதும் உண்டு அகிலத்திலே...

மகளிர் பெருமை கூறும் இந்நாளிலே

மனம் திறந்து வாழ்த்துவோம் மங்கையை...


                         கவி வரிகள்: {உஷா நிலா }
                                    uthayausha88@gmail.com 

நிருபர்,,,,,,,



நிருபர்,,,,,,,
மூடிமறைக்கப்பட்ட சம்பவங்களை
வெளிச்சத்துக்குக் கொண்டுவரும்
நிதர்சனவாதி..
அச்சமின்றி அலைந்து
அவலங்களை அகிலத்துக்கு வழங்கும்
அகிம்சாவாதி
செய்திகளை சேகரித்து
செவ்வனே தொகுத்தளிக்கும்
மக்கள் நண்பன்...

உண்மையை உலகிற்கு எடுத்துரைக்க
தன் உயிரையே தியாகம் செய்யும்
உண்மைப் பாங்கன்
மெய்யை நிலை நாட்ட
பேனா முனையில்
போராடும் போராளி...

அவன் எழுத்துருவில்
வடித்த தகவல்கள்...
அவனிக்கு எடுத்துரைக்க
ஏந்திவரும் பத்திரிகை...
நாட்டின் தலையெழுத்தை
மாற்றும் உந்து சக்தியும்
அவன் கையேழுத்தே..

நாளிதழ் சுமந்து
வரும் நாட்குறிப்பில் நாடெங்கும்
பவனிவரும் செய்திகளோ ஏராளம்
எதையும் துச்சமென எழுத்தாணி
பிடித்து எழுதிய உண்மைகள்...
ஏற்றத்தாழ்வின்றி
ஏந்திடும் பத்திரிகை
விளைநிலத்தின்
ஏர்க்கலப்பையாய் உழுது....
உரமாய் உறிஞ்சி...
உழைப்பால் பெருகி,,,
பத்திரிகைத் துறைக்கு
பசளையிட்ட
பெருமையும்
 
அவனையே சாரும்..

 கவி வரிகள்: {உஷா நிலா }
                usha.uthayakumar@yahoo.com