Thursday, 4 October 2012

வாலிபம்.........

இலக்கிய வானில் கோலமிடும்

மின்மினிகள் போல்...,
வசந்தங்களுக்கும் வண்ணமளித்து
வடிவமைப்பது வாலிப வாழ்க்கையே..!


காகிதத்திற்க்கு கற்பனையையும்
சிந்தனைக்கு உள்ளத்தையும்
பேனாவிற்கு கரத்தையும்
அன்பளிக்கும் காலமிது,,,!

சிறகில்லை ஆனால் பறப்பாய்..!

காலிருந்தும் வானில் மிதப்பாய்..!
இது தான் உன் இளமை..!
மனத்திரைக்கு மாலைகள் போட்டு
மலர்க்கூட்டமாக்குவாய்... !
காதலும் உன்னை சோதிக்கும்
வயது இது...!

பட்டாம்பூச்சியாய் பாடித்திரிந்து

பல கதை பரிமாறும் பருவமிது...!
உன் கனவுகளுக்கு களம் தீட்டும் ஏவுகணை
இந்த உதயம்..!
பல கனவுகளை தேடி
உன் உயிர் போகும் பயணமிது,,!

{கவிதை இயக்கம்: உஷா நிலா}

No comments: