என் வாலிபத்தை விபத்துக்குள்ளாக்கிய
உன் விழிகளுக்கு விஞ்ஞாபனம் விதைத்தது யார்?
நான் வழுக்கி விழுந்த உன் இதயவரையை
வடிவமைத்தது யார்?
நான் துயில் கொள்ளும் பூந்தோட்டமான
உன் மார்பிற்க்கு மைதானம் வரைந்தது யார்?
என் விழிகள் உன்னை ஸ்பரிசிக்கும் போது
என் உயிர் சொர்க்கத்தை எட்டுகிறது...
என் உயிர் சொர்க்கத்தை எட்டுகிறது...
வார்த்தைகளை மட்டும் வாசிக்க தெரிந்த எனக்கு
காதலையும் சுவாசிக்க கற்று தந்தது உன் பாசம்..
என் கற்பனைகளும் முரண் பட்டு கொள்கிறது உயிரே
எம் மொழியில் உன்னை வர்ணிப்பது என தெரியாமல்...
இவை அனுபவமல்ல
இக் கற்பனைகளின் இயக்கம்: உஷா நிலா
No comments:
Post a Comment