Thursday, 4 October 2012

என் பிறப்பின் தாய்.........



அம்மா உனது குருதி குளியலில்
என் ஜனனம்...
உனது பூமடிதான் நான் துயிலும்
பஞ்சனை...
உன் பத்து மாத தவம்
இன்று என் பரிணாமத்தின் உதயம்...


தாயே...!
என்னை இழந்து உன் உயிர் காக்கும்
தருணம் வரினும் அன்னையே
அது என் பாக்கியமே....
இல்லையேல் மீண்டும் உன்னை
என் கருவினில் சுமக்கும் தருணம் வரினும்
அது என் பூர்வ ஜென்ம வரமே...


கவிதை இயக்கம்: உஷா நிலா

No comments: