Thursday, 4 October 2012

வான் முத்து,,,,,,,,,

                            நிலா...............
வானமெனும் பூங்கடலில்
வலம் வரும் பூங்கொடியே ...!
விண்ணை விட்டு நீ மண்ணகம் வர
முள்வேலி போட்டதாரோ?

செப்டெம்பர் மாதத்து செப்பனிட்ட அழகே....!

செங்கடலும் நீ இன்றி செம்மையளிக்கவில்லை...
கவிஞர்களின் கற்பனைக்கு
நீயின்றி ஏது சொர்ப்பனம்...!

எட்டா தூரத்தில் நீயிருக்க- என்

விரல் உன்னை தொட்டு
பார்த்திட விரதம் இருக்கு..!
முகில்திரையை மெல்ல நீ விலக்கு
இல்லை தொடரும் உன் மீது என் விழி வழக்கு...!

{ கவி வரிகள்: உஷா நிலா}

No comments: