Friday, 5 October 2012

மரணம்.......



                                     மரணம்........

குறிக்கப்பட்ட தேதியில்
பறிக்கப்பட்ட மலர்...
மீண்டும் புவிதனில் அவதரிக்க
நிகழ்ந்திடும் புது முயற்சி...

ஓய்வினைத் தேடிய உயிருக்கு
விடிவினை தராத உறக்கம்..

வாழ்க்கைப் பாதையின்
இறுதி யாத்திரை..
உன் சொர்க்கத்தையும்
நரகத்தையும் தீர்மானிக்கும் வாசல்
உன் உதயம் அஸ்தமனமாகும் நாள்
அதுவே மரணம்,,,
 
                  கவி வரிகள் : உஷா நிலா........
                  
 

No comments: