Friday, 5 October 2012

உன் நினைவுகளில் நான்....



அலைகளுக்கு திரும்பிப் போக இஷ்டமில்லை...
உன் கால் தடம் படாததால் அலைகளுக்கு
திரும்பிப் போக இஷ்டமில்லை...
சிம்மாசன பதவியேற்றம் நீ
அமர்ந்த கதிரைகளுக்கெல்லாம்...

உன் பார்வை பட்டு தானோ சூரியன்
ஒளித்தொகுப்பு செய்கிறது...


நீ அருகில் இருக்கையில் என்

வார்த்தைகளுக்கு ஊரடங்கு சட்டம்...
நிலவுக்கும் நித்திரையில்லை உன் நினைவால்...
சந்திரனில் குடியேற விஞ்ஞானம் முயற்சி...
உன் மடியில் இளைப்பாற கோள்கள் எல்லாம் போட்டி...
இவைகளுக்கில்லா பெருமை எனக்கு...
நீ கிடைத்ததில் உன்டான மகிழ்ச்சி....
 
                         கவி வரிகள் : உஷா நிலா........
                                   uthayausha88@gmail.com

No comments: