Wednesday, 3 October 2012

சுனாமி வந்ததால்........


2007 தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற கவிதை போட்டியில் முதலிடம் பெற்ற என் கவி வரிகள்...
சுனாமி வந்ததனால்....


ஆழிப்பேரலை எனும் அடங்கா சுனாமி

ஆர்ப்பரித்து எழுந்து வந்ததனால்
எம் அகிலமும் அல்லல் கண்டது...
நீ ஆடிய ஊழி கூத்தினால்
எம் தேசமே சிதைந்து போக கண்டாயோ...

தத்தை மொழி பேசி

தத்தி தத்தி தவழும்
பச்சிளம் பாலகன் உனக்கென்ன கொடுமை செய்தான்?
ஈவிரக்கம் கொண்டாயோ நீ?

கல் மண் சேர்த்து

தன கஷ்டம் கொண்டு கட்டிய மனையில் வாழ
எத்தனை நெஞ்சங்கள் துடித்திருக்கும்...
அத்தனை அகங்களுக்கும்
அகதி முகாமை சொந்தமாக்கி விட்டாயே..?
இமை திறக்கும் ஒரு நொடியில்
எமன் உருவம் எடுத்தாயே?

அலை கொண்டு நீயளிக்க

அகிலமெல்லாம் துடி துடித்தார்கள்...
எட்டுத்திசையின் அலுகுரலுமா
எட்டவில்லை உன் செவிகளுக்கு?
பலரின் ஜனனம் அன்று மரணமாகியதே...
உன் தாகம் தீர
குருதி ஆறு பிறந்ததோ அன்று..
இருப்புகள் ஈடேறியபோதும்
இன்றும் ஈடேறவில்லை
எம் மனத்துயரங்கள்...

மீண்டும் வந்து விடாதே

மீள்குடியேற்றம் செய்யினும்....
மாண்ட உறவுகளை எம்மால்
மீட்க்க முடியாது...

{கவிதை இயக்கம்: உஷா நிலா}

No comments: